Posts

INDIAN 2 ~இந்தியன் தாத்தா சமூக பொறுப்பில்லாமல் சமூகத்தில் நடக்கின்ற ஊழலை தடுக்கிறார்..

Image
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் நேற்று பார்த்தேன். வழக்கம் போலவே இயக்குநர் சங்கர் படங்களில் தலித் மக்களை இழிவாக சித்தரிப்பது போலவே, இப்படத்திலும் மிக மோசமாக சித்தரித்திருக்கிறார். படத்தின் தொடக்கத்திலேயே நடிகர் ஜெகன் முதன்மை தூய்மை பணியாளரிடம் ”செய்ற வேலைக்கு தானே சம்பளம் வாங்குறீங்க சரியா பன்னுங்க” என்று பேசும் வசனம் மிகவும் சமூக பொறுப்பற்றதாகவும் , எரிச்சலூட்டும் விதமாகவும் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் இப்படத்தில் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்க்கும் சமூக ஊடகவியாளர். இந்த வசனத்தை நாம் எளிதாக கடந்து செல்ல முடியாது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களின் படங்களிலும் இது போன்ற சமூக பொறுப்பற்ற வசனங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகிறது. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் பறை அடிப்பவர்களிடம் ”காசு வாங்குறீங்கள வேகமா அடிங்க” என்ற வசனம் வைத்திருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தலித் மக்கள் செய்யும் தொழிலை ஏன் இவ்வளவு இழிவாக பேசுகிறார்கள்? இதுவும் மிக கொடுமையான தீண்டாமை தான். அடுத்து இந்தியன் 2-வில் தலித் சமூக மாணவன் தன் படிப்பிற்காக வாங்குன க...

ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடா இல்லை சாதி பெருமிதமா?

Image
2017 ஜல்லிக்கட்டு போராட்டம் அப்போ எடுத்த  புகைப்படம்  அந்த நேரத்துல  school lam லீவ் போட்டு ரயில நிப்பாட்டி  மேல ஏறி  ரொம்ப தீவிரமா போராட்டத்துல  ஃபயர் விட்டுடு இருந்தன். தமிழன்டா ஜல்லிக்கட்டு கலாச்சாரமுனு ,ஆன  போக போக தான்  தெரியுது ஜல்லிக்கட்டு போட்டில தீண்டாமை தீவிரமா கடைப்பிடிச்சுட்டு வராங்கனு. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டில தலித்துகள் கலந்துகுராங்க ஏன்னா அது மாநில அரசு நடத்துறதுனால அப்பவும் அங்க முழுமையா வாய்ப்பு கிடைக்கல தீண்டாமை தான் நிலவுது. இன்னும் மதுரையை சுத்தி இருக்க  பக்கலாம் ரொம்ப மோசம்  அங்க இருக்க ஆதிக்க சாதி மக்கள் தான் போட்டிய ஏற்பாடு செய்வாங்க அவங்க மட்டும் தான் கலந்துப்பாங்க. தலித் இளைஞர் போட்டி ல கலந்துக முடியாது. இதனால நிறைய சாதி சண்டைங்கள் உயிர் இழப்புகள் ஏற்பட்டிற்கு  இந்த விளையாட்டு சாதி பெருமை, தீண்டாமை , சமத்துவமின்மை தான் கடைப்பிடிச்சுடு வருது. இது  முழுமையா தூய தமிழர் பண்பாடுனு சொல்ல முடியாது ஏன்னா  அதன் தற்போதைய வடிவத்தில், இந்த விளையாட்டு 16 ஆம் நூற்றாண்டில தெலுங்கு பேசும் நாய...

இயக்குநர்களுக்காக மாறிய சினிமா

இயக்குநர்களுக்காக மாறிய சினிமா  முன்னுரை: வேறெந்த கலைக்கும் இல்லாத ஒரு மாபெரும் பெருமை சினிமாவிற்கு இருக்கிறது. சாதி பாகுபாடு இன்றி எல்லா சாதி மக்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்த கர்வமிகு பெருமை அது. எல்லோரையும் ஒன்றாக கூட செய்ததால் சினிமா ஒரு புரட்சிகரமான கலையாகவே இங்கு இருக்கிறது. சினிமா என்றாலே மென்(men)ஹீரோயிசம் தான் என்ற நிலைமை மாறி தற்போதைய சூழலில் இயக்குநர்களுக்கென்று தனி ரசிகர் படை உருவாகி கொண்டு இருக்கிறது. இதனைப் பற்றிய ஆய்வார்ந்த தகவல்களை இக்கட்டுரையில் காண்போம். ஹீரோ வழிபாடு( Hero workship) உலக சினிமா முதல் தமிழ் சினிமா வரை மக்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களால் ஈர்க்கப்பட்டு உளவியல் ரீதியாக பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்தவை.உதாரணமாக சக்திமானின் ஹீரோயிசத்தால் ஈர்க்கப்பட்டு சிறுவன் மாடியில் இருந்து சக்திமான் காப்பாற்றுவார் எனக் கூறி கீழே விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டது நாம் அனைவரும் அறிந்தவை. தமிழ் சினிமா எடுத்துக் கொண்டால் அந்த காலம் ரசிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,கமல் என ஆரம்பித்து தற்போது விஜய் ,அஜித் வரை அவர்களின் ரசிகர்கள் கண்மூடித்தனமா...

Leo movie review

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், விஜய்யின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஆனால், சிலர் படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றை விமர்சனம் செய்கின்றனர். படத்தின் கதை இமாச்சல பிரதேசத்தின் தியோக் பகுதியில், மனைவி சத்யா (த்ரிஷா), மகன் சித்தார்த் (மேத்யூ தாமஸ்), மகள் மதி (யல்) ஆகியோருடன் வசித்து வருகிறார்‌. பார்த்திபன் (விஜய்). கஃபே சாப் நடத்தி வருகிறார். படம் தொடங்கிய முதல் 10 நிமிடம் பார்த்திபன் ஹைனாவை அடக்கும் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.   காஃபே சாப்பில் பார்த்திபன் மற்றும் போதை கடத்தல் கும்பல்  இடையே நடக்கும் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது.இதன் பிறகு, அவர் பலரின் கண்ணை கட்டுகிறார்.இதனால் வரும் விளைவு தான் படத்தின் மீதிக்கதை. படத்தில் விஜய்யின் நடிப்பு அசத்தலாக உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் பட்டையைக் கிளப்பியுள்ளார். திரிஷாவின் நடிப்பும் பாராட்டத்தக்கது.சேன்டியின் நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது.லோகேஷ் கனகராஜின் இயக்கம் படத்தின்...

My Father Baliah A book review

The book ‘My Father Baliah’ talks about three generations of people from a repressed family. It details how education and accessibility transformed their lives, breaking the shackles of caste. The author Mr.Satyanarayana traverses through his family history to portray their growth. His father Sri. Baliah who has faced the real brunt of discrimination, is the protagonist of this family narrative. At a very young age, he gets a clear idea that only education can help his future generations to come out of this misery. The turning point in his life comes with him getting a job with the Indian Railways. When the British introduced railways across the country, it opened up a lot of jobs like boxmen.The job entailed carrying the box (with the personal belongings) of the guard, from one train to another or from train to home and vice versa.   For Baliah’s family, his job in railways gave two major benefits. The first one being staying in railway employees quarters, where the caste b...

கவிதை

Peraasai dhn adutha piravi mel manithanaaga pirapatharku Alla!! Aval kattum selai aga madipu thavaru aanlum sari aanalum adikadi aval kai viral thotu sari seium paakiyasaaliaga😍

மாமன்னன்

சமீபத்தில் மாரிசெல்வராஜ் தேவர் மகன் படத்தை பற்றி பேசியது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. தேவர் மகன் குறித்து அவர் பேசியது முழுக்க முழுக்க சரிதான். தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது மற்றும் சாதி உணர்வை மேலும் தூண்டியது. தேவர் மகன் படத்தை ஆதரிப்பவர்கள் கூறும் கருத்துக்கள் பெரும்பாலும் "அந்த ஜாதிக்குள் இருக்கும் முரண்களை பற்றி அந்த படம் பேசுகிறது இதில் மற்ற ஜாதியை இழிவு படுத்தவில்லை" என்பதுதான். ஆனால் உண்மையில் அந்தப் படத்தில் ஒரு ஒரு வசனமும் பாடல்களும் சுயசாதி பெருமையே பேசுகிறது. சுயசாதி பெருமை எப்போதும் சாதி உணர்வை தான் மேம்படுத்தும். சாதி பெருமை பேசும் போதே தாங்கள் மேன்மையானவர்கள் என்று எண்ணம் தோன்றிவிடுகிறது. தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதற்கும் ஹீரோவின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காகவும் மண்வாசனை படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இயக்குனர்களும் நடிகர்களும் பெரும்பான்மையான சமூகத்தை அடையாளப்படுத்திய படம் இயக்குவதும் ...